மைத்திரியிடம் இன்றும் சி.ஐ.டி. விசாரணை – இரண்டு மணி நேரம் வாக்குமூலம்

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜரானார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் வௌியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இன்று காலை 10 மணியளவில் திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 02 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிட்ட கருத்து குறித்து இதற்கு முன்னரும் அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்தியாவுக்குத் தொடா்பிருப்பதாக ஏற்கனவே அவா் தெரிவித்திருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே இன்றைய தினம் அவா் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாா்.