கல்முனையில் 50 ஆவது நாளை எட்டும் மக்கள் போராட்டம் – இன்றைய பேரணியில் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்பு

23 கல்முனையில் 50 ஆவது நாளை எட்டும் மக்கள் போராட்டம் - இன்றைய பேரணியில் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்புகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்து பொதுமக்கள் – சிவில் அமைப்புக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளை திங்கட்கிழமை ஐம்பது நாட்களை எட்டுகின்றது.

அதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் மனிதப் பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது. பேரணிக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஊர்வலமாக சுமார் 4 ஆயிரம் பேர்வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

24 கல்முனையில் 50 ஆவது நாளை எட்டும் மக்கள் போராட்டம் - இன்றைய பேரணியில் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்புஇன்று 49 ஆவது நாளாக அந்தப் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. பெருமளவு மக்கள் பங்கேற்ற பேரணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை அடைந்தது. மிக நீண்ட நேரம் மக்கள் கோஷங்களை எழுப்பி பதாதைகளைத் தாங்கிய வண்ணம் வலம் வந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியிலும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் பெருமளவு மக்கள் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து போராட்டத்தில் கலந்துகொண்டமை ஏனைய மக்களையும் உணர்ச்சி வசப்படுத்தியது.