தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் சிங்களவா்தான் ஜனாதிபதி – சிறிதரன் தெரிவிப்பு

IMG 20240512 WA0028 தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் சிங்களவா்தான் ஜனாதிபதி - சிறிதரன் தெரிவிப்புதமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் என்ன நிறுத்தாவிட்டால் என்ன சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் .

கொள்கைகளை வைத்து வேட்பாளரை நிறுத்தலாம் இது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி வவுனியாவில் இடம் பெறவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்தும் ஆலோசனைகளை பெற்றும் முடிவுகளை எடுப்போம்.

மாவட்ட கிளை மத்திய செயற் குழு தொடர்பில் ஆராய்ந்து அந்த முடிவுகளை எடுக்கலாம். கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கட்சி தொண்டர்களுடனும் முன்னை நாள் பிரதேச சபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலை ஆரம்பித்து மகிழ்ச்சிகரமாக முடிவு செய்துள்ளோம் என்றார்.