திருகோணமலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மூதூர் பொலிஸாரால் சம்பூரில் கஞ்சி வழங்கப்பட்ட போது ஐசிசிபீ ஆர் குற்றச் சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் நேற்றைய தினம் இது தொடர்பில் தடையை அகற்றக் கோரிய சமர்ப்பணத்தை சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் மன்றில் வாதிட்டார் இதனை தொடர்ந்து மன்றினால் தடை உத்தரவு அகற்றப்பட்டுள்ளதை அடுத்து முள்ளி வாய்க்கால் கஞ்சிகளை வழங்கி வைத்தனர்.
திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கஞ்சிகளை அருந்தினர். இதில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.