போரில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் இன்று நினைவேந்தல்

veeramahadevi park போரில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் இன்று நினைவேந்தல்போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கிலும், தெற்கிலும் மரணித்தவர்கள் நம்மவரே. எம் தாய்நாட்டில் தம் உயிரை இழந்த அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையோடு மௌனம் செலுத்தி அஞ்சலி செய்வதற்கு அனைவரும் கைகோர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, நாம் மாறிவிட்டோம் என்று சத்தியம் செய்வதற்கும், நாம் நம்மை அறிந்து கொண்டோம் என்று சொல்வதற்கும் விளக்கொன்றை ஏற்றுவதற்கு வருகை தருமாறும் ஏற்பாட்டாளர்களால் கோரப்பட்டுள்ளது.

மேலும், யுத்தத்தில் பற்றியெரிந்த உள்ளங்களை ஆற்றுவதற்கும் மனித நேயம் மிக்க நட்பு ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்கு மாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.