கலப்புப் பொறிமுறையை ஏற்கமுடியாது! – மன்னிப்புச் சபை செயலரிடம் நேரில் வலியுறுத்திய உறவுகள்

96 கலப்புப் பொறிமுறையை ஏற்கமுடியாது! - மன்னிப்புச் சபை செயலரிடம் நேரில் வலியுறுத்திய உறவுகள்காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு கலப்பு பொறிமுறையை ஏற்க முடியாது எனவும் சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்ணஷ்ண் இச்டூடூச்ட்ச்ணூஞீ ற்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவிலுள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்றில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பிலேயே மேற்கண்டாவாறு வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் பின்னர் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப்பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையின் உள்நாட்டு ஆணைக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளரிடம் எடுத்துக்கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச நீதிபதிகளின் கண்காணிப்பில் கலப்புநீதிமன்ற பொறிமுறையில் உள்ளக விசாரணைமூம் நீதியைப் பெற்றுத்தருவது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் யோசனை யொன்றை முன்வைத்ததாகவும் இருப்பினும் தாம் அதை மறுத்ததுடன் சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு தற்போது தமக்கு புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள் தமது போராட்டத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை தற்போது தமிழர்பகுதிகளில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாதிப்பு நிலை தொடர்பிலும் இதன்போது
தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.