4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குஜாராத்தில் கைது – இலங்கையைச் சோ்ந்தவா்கள் எனத் தகவல்

94 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குஜாராத்தில் கைது - இலங்கையைச் சோ்ந்தவா்கள் எனத் தகவல்இந்தியாவின் குஜராத் தீவிரவாத புலனாய்வு பிரிவு, இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் தீவிரவாத புலனாய்வுப் பிரிவு இந்த சந்தேக நபர்களை தீவிர விசாரணைக்காக ஒரு அறிவிக்கப்படாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக TV9 குஜராத்தி செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவர்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்தமைக்கான துல்லியமான நோக்கமும் உள்நோக்கமும் இதுவரை தெளிவாகவில்லை.

இந்தக் கைதையடுத்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது, ஐ.பி.எல் தகுதிகாண் போட்டிகளுக்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் மூன்று ஐ.பி.எல் அணிகள் வருவதற்கு முன்பாக நடைபெற்றது.

மார்ச் மாதத்தில், இரண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர்களை, பங்களாதேஷ் எல்லையை கடந்துவந்த பிறகு, சர்வதேச எல்லை அருகே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் உத்தரகாண்டின் டேராடூனில் வசிக்கும் ஹரிஷ் அஜ்மல் பாரூக்கி அல்லது ஹரிஷ் அஜ்மல் பாரூக்ஹி, மற்றும் ஹரியானாவின் பானிபத்தில் வசிக்கும் அனுராக் சிங் அல்லது ரெஹான் என அடையாளம் காணப்பட்டனர்.