குஜாராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கொழும்பு விரைவு – சூடுபிடிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்த விசாரணை

குஜராத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது. குஜாராத்தில் கைதானவா்களுடன் இந்த இருவரும் தொடா்பில் இருந்ததாகக்கூறப்படுகின்றது.

எனினும் மற்றொருவரான ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்ய உதவுபவா்களுக்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.