விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட 15 அமைப்புக்களின் சொத்துக்களும் நிதிகளும் முடக்கம் – விசேட வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை அரசு 15 தீவிரவாத அமைப்புக்களின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

15 தீவிரவாத அமைப்புக்கள், அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள், நிதிகள், பொருளாதார வளங்களைச் செயல் இழக்கச் செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும், சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.