விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் காலமானார்!

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் காலமானார்!தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் மூத்த தளபதியான விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 60) நேற்று செவ்வாய்க் கிழமை காலமானார்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணியை சொந்த இடமாகக் கொண்ட இவர், புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் முன்னெடுத்த பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இவர் புலனாய்வுக்கு தலைமை தாங்கியிருந்தார். அத்துடன், பல புலனாய்வு போராளி களை உருவாக்கியிருந்தார்.

கட்டுநாயக்கா விமான படைத்தளம் மீதான தாக்குதலில் இவரின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.