யாழ்ப்பாண இளைஞர் கொழும்பில் கைதானார் – கனடா தப்ப முயன்றபோது அதிரடி

நீதிமன்றால் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

தரகர் ஒருவர் வழங்கிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தபோதே அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 34 வயது இளைஞராவார். இவர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி குறித்த இளைஞர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதற்காக அநுராதபுரத்திலுள்ள முகவர் ஒருவருக்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் வழங்க தயாராக இருந்தார் என்றும் தெரிய வருகின்றது.