ஜனாதிபதி ரணிலை அவசரமாகச் சந்தித்த மொட்டுக் கட்சியின் எம்.பி.க்கள்

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு – பத்தரமுல்லையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் 31 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். மாவட்ட இணைப்பு செயல்குழுக்களின் தலைவர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பொதுஜன முன் னணியின் பொது செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.