ஐ.எம். எவ்வின் 3ஆம் கட்ட கடன் குறித்த பேச்சு இன்று ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) மூன்றாவது தவணை கடன் வழங்குவது குறித்த பேச்சு இன்று புதன் கிழமை ஆரம்பமாகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு குழு இலங்கைக்கான திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்தது.

இந்த நிலையில், இலங்கைக்கு மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது, இலங்கையின பொருளாதார கொள்கைகள், பொருளாதார மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளளார்.

அத்துடன், மூன்றாவது தவணைக்கான வெற்றிகரமான மீளாய்வுக்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தால் மூன்றாவது கடன் தவணையாக 33 கோடி அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து 290 கோடி டொலரை கட்டம்கட்டமாகக் கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.