யாழ்ப்பாண இந்திய துணைத் துாதரகத்தை முற்றுகையிட்ட மீனவா்கள் – அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்

9 1 யாழ்ப்பாண இந்திய துணைத் துாதரகத்தை முற்றுகையிட்ட மீனவா்கள் - அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலுள்ள இந் தியத் துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்திய அரசே எமது கடல் வளத்தினைச் சூறையாடாதே!, எம்மையும் வாழவிடுங்கள்! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு யாழ் மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். இந்தியத் துணைத்தூதரகத்தையடைந்து அதன் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 யாழ்ப்பாண இந்திய துணைத் துாதரகத்தை முற்றுகையிட்ட மீனவா்கள் - அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்இதன் போது இலங்கைக் கடற்படையே, நிறுத்து! நிறுத்து!! அத்துமீறலைத் தடுத்து நிறுத்து!!!, கடற்றொழில் அமைச்சரே கண்ணைத் திறந்து பாருங்கள்!, இந்திய அரசே எம்மையும் வாழவிடு!, சிறிலங்கா காவல்துறையே எங்களைத் தடுக்காதே! – உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியத் துணைத் தூதுவரைச் சந்தித்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றைக் கையளித்தனர்.