திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திருந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் மூதூர் மணிக்கூடுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம் வரை நடைபாதை வழியாக சர்வமத தலைவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மற்றும் இருதயபுர பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இறுதியில் மூதூர் பிரதேச செயலாளருக்கு பொது மக்கள் சார்பாக மதுபானசாலையை மூடும் படியான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.