ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற ரணில் முயல்கிறாா் – விமல் வீரவன்ச

WIMAL WEERAWANSA 2 ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற ரணில் முயல்கிறாா் - விமல் வீரவன்சஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டுமே முடியாதளவு அதிகாரம் இருந்தது. ஆனால் இப்போது அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்க அதனையும் செய்யவே முயல்கிறார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்ட “சர்வ ஜன பலய” அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டட்டம் நுகேகொட நகரில் நேற்று நடைபெற்ற போது அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூல விடயத்தில் ஜனாதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அன்று ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது, அவருக்கு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டுமே முடியாதளவு அதிகாரம் இருந்தது. ஆனால் இப்போது அவரின் மருமகன் அதனையும் செய்யவே முயல்கிறார்” என்று குற்றஞ்சாட்டினாா்.

“இங்குள்ள மின்சாரத்துறை, ரெலிகொம், விமானத் துறை ஆகியவற்றை இந்தியாவின் நிறுவனங்களிடம் கொடுக்க முயல்கின்றனர். எரிபொருள், எரிவாயு ஊடாகவும் இரு நாடுகளும் இணைக்கப்பட உள்ளன. இதேவேளை 13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைபடுத்தபடும் என்று அநுர குமார, சஜித் ஆகியோர் கூறுகின்றார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் கூறுவார். மொட்டு கட்சியினரும் ரணில் போடும் தாளத்திற்கு ஆடுவர். ஆபத்து இடைவேளைதான் இப்போது உள்ளது. கடன் மீள செலுத்தும் போது ஆபத்து புரியும். நாங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்” என்றும் விமல் வீரவன்ச தமது உரையில் மேலும் தெரிவித்தாா்.