திருகோணமலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதி வியாபாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியின் திருகோணமலை நகரசபை வரை ஊர்வலமாக சென்றனர். தங்கள் வியாபாரத்தை சுதந்திரமாக மேற்கொள்ளுமாறு ம் வீதி வியாபார நடவடிக்கைகளை தடை செய்ய கோரி யும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
திருகோணமலை நகர சபைக்கு மாத கட்டணம் செலுத்தி வருகிறோம் ஆனால் வீதியோர வியாபாரிகளை அனுமதித்து விற்பனை நடவடிக்கையை மேற்கொள்வதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன் போது பதாகைகளை ஏந்தியும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த சந்தை வியாபாரிகள் திருகோணமலை நகர சபை செயலாளர் அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் இதன் போது கையளித்தனர்.வியாபார நடவடிக்கைகள் ஒரு சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.