நாடு திரும்பினாா் இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கா்

7 1 நாடு திரும்பினாா் இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கா்உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுக் காலை இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று இரவு நாடு திரும்பினார்.

ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கை வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.