சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ. எம். எவ்.) விசேட அறிக்கை ஒன்று இந்த வார இறுதியில் வெளியாகும். இதைத் தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என்று தெரிய வருகின்றது.
வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற செய்தியை சா்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. மறுநாள் ஜனாதிபதியின் தோ்தல் தொா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
இதனிடையே, இந்த வாரத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சிலர் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வர் என்றும் கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜித சேனாரத்ன, இந்த வாரத்தில் ரணிலுடன் இணைவார்.
அவர் தவிர சிறீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த மேலும் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேசமயம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கட்சியின் சார்பில் பங்கேற்காமல் சுயாதீன பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.