மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் உள்ள கணியவள (இல்மனைட்) மற்றும் இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள், கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் தமிழ் மக்கள் பொதுச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளையில், நேற்று பிற்பகல், வாகரை, அம்மந்தனாவெளி கிராமத்தில், அங்குள்ள விவசாய குழுக்கள் மற்றும் கடல் தொழிலாளர் சமூகத்தினருடன், தமிழ் மக்கள் பொதுச்சபையினர் கலந்துரையாடினார்கள்.