சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு மாலை திருமலையில்

9 2 சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு மாலை திருமலையில்திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும்7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரது பூதவுடல் இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, திருகோணமலை தபாலக வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 7 ஆம் ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்
செல்லப்படவுள்ளது.