ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு எத்தனிக்கிறார் ரணில் – செல்வராசா கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதி ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைகளுக்கு விலை போகக்கூடியவர்களை வைத்துக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத்தரப்புக்கள் தெரிவித்து வருகிறார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை எந்த வகையிலும் நம்பிக்கை தரவில்லை, நாட்டை பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி கொண்டு செல்வதாக கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நாட்டில் 75 வருடமாக காணப்படும் இனப்பிரச்னை தீர்க்கப்படவேண்டும். மேலும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ரணில் முன்னெடுத்து வருகிறார்” என்றார்.