திருகோணமலையில் அமரர் சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி நாளை இறுதி கிரியை

IMG 20240706 WA0015 திருகோணமலையில் அமரர் சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி நாளை இறுதி கிரியைகாலஞ்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு இன்றும் (06) பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (07) இறுதி கிரியைகள் இடம் பெறவுள்ளதாக குடும்பஸ்தினர் தெரிவித்தனர்.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.