காங்கேசன்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

13 இந்திய மீனவர்கள் பயணித்த 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான இந்திய மீனவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.