ஒக்ரோபா் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் – அமைச்சா் அலி சப்ரி தெரிவிப்பு

தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும், எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியன குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிச்சயமாக நடைபெறும் என்பதை ஜனாதிபதி தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தார். இதன்பிரகாரம் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். தேர்தல் செலவினங்களுக்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்” என்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேலும் தெரிவித்தாா்.

“தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட வேலைத்திட்டங்களை மக்கள் நன்கு அறிவார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம்” என்றும் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதே நாட்டுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” என்றும் குறிப்பிட்டாா்.

ஜனாதிபதித் தோ்தல் தினம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சா் அலி சப்ரி இதனைத் தெரிவித்தாா்.