பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயல் – சர்வதேச நீதிமன்றம்

பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.