காஸா போரில் கொல்லப்படும பத்திரிகையாளர்கள்!

காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  ஜபாலியாவில்    உள்ள வீட்டில் பத்திரிகையாளர் முஹம்மது அபு ஜாசர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று காஸா மீதான இஸ்ரேலின் போரில் 38,919   கொல்லப்பட்டுள்ளனர். 89,622 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் காசாவில் இஸ்ரேல் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  போரில் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.