இலங்கை அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றது 

இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி தனக்கு எதிரானவர் களையும், சிறுபான்மை மக்களை யும் துன்புறுத்தி வருவதாக அமெரிக்காவின் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரி மைகள் கண்காணிப்பகம் கடந்த புதன்கிழமை  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுந்தமானமான கைது மற்றும் தடுத்து வைத்து துன்புறுத்து வது போன்றவற்றால் பலர் நீண்ட காலமாக துன்பங்களை சந்தித்து வருகின்றனர். நீண்டகாலம் தடுத்து வைக்கும் மற்றும் எழுந்தமானமாக கைது செய்யும் அதிகாரங்களை பயங்கரவாதச் சட்டம் அரசுக்கு வழங்குகின்றது.
ரணில் விக்கிரமசிங்கா 2022 ஆம் ஆண்டு அரச தலைவராக பதவியேற்றபின்னரும் இந்த சட்டம் தொடர்கின்றது. அனைத்துலக நாணய நிதியமும் இது தொடர்பில் 2023 ஆம் ஆண்டு கருத்தில் எடுத்திருந்தது.
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் 2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக மாற்றப்பட்டபோதும் அதுவும் மக்களை துன் புறுத்தும் சரத்துக்களைக் கொண்டுள்ளது.
எனவே இந்த சட்டத்தை அகற்றுவதற்கு இலங்கை அரசின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகிய நாடுகள் அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 46/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.