கிளிநொச்சி: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.