வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று பாடசாலையின் அதிபர் செ. யேசுநேசன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் கல்வி திட்டமிடல் திருமதி தே.உமாதேவன், சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஓமந்தை கு. சசிக்குமார், கௌரவ விருந்தினராக ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி த. ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் என்பனவற்றை வழங்கி கௌரவித்தனர்.
பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.