கொரொனோ வைரஸ்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.அந்தவகையில் வவுனியா நகரசபை,மற்றும் சுகாதாரபிரிவினர், விசேடஅதிரடி படையினரின் ஏற்பாட்டில் வவுனியா புதியபேருந்து நிலையம், மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள்,பழைய பேருந்துநிலையம் மற்றும் நகரின்முக்கிய பகுதிகிளில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் பொது இடங்கள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டு மருந்துகள் விசிறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.