கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம்குறித்த விடுதி இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த தனியார் விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.