தமிழினத்தின் ஆன்மாவில் அழியாத வடுவை பதித்துநிற்கும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அந்த மண்ணில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வை இடம்பெறாமல் செய்வதற்கு அரசாதரப்பால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் இவற்றை எல்லாம் தாண்டி எம்மக்கள் தமது அன்புக்குரிய உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.