கொரோனா அச்சம் காரணமாக, MV Costa Mediterranea எனும் இத்தாலி பயணிகள் கப்பலில் இருந்து பணியாளர்களை வெளியேற்றுவதற்காக இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் Tanjung Priok துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கப்பலில் இருந்து இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, ஹொண்டுராஸ், பெரு, எத்தோபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியேறிய இக்கப்பல் பணியாளர்கள் அனைவரும் அடுத்த இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்.