யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, கொரோனா மருத்துவ குழுவினரிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் தோறும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது.
ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், இன்று உத்தியோகபூர்வமாக மருத்துவ குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு யாழில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.