உலக புள்ளிவிபரத் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய துண்டுபிரசுரம், அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபரிடம் யாழ் மாவட்ட புள்ளிவிபர அலுவலக பிரதிப் பணிப்பாளர் பா.பாலச்சந்திரனால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
உலக புள்ளிவிவர தினம் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் 20 அக்டோபர் 2010 அன்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளை கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருட தொனிப் பொருளாக ‘நம்பத்தகுந்த தரவுகளுடன் உலகை இணைத்தல்’ “Connecting the world with data we can trust”என ஐ.நா புள்ளிவிபர ஆணையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.