தென்பகுதி மக்களின் நலனுக்காக வடக்கு கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும்போது அப்பகுதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துகளையும் செவிமடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.