அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செல்வராசா கஜேந்திரன்
சி.வி.விக்கினேஸ்வரன்
இரா.சம்பந்தன்
எம்.எ.சுமந்திரன்
செல்வம் அடைக்கலநாமன்
சாள்ஸ் நிர்மலநாதன்
சிவஞனம் சிறீதரன்
நோகராதலிங்கம்
கோ.கருணாகரம்
சாணக்கியன் இராசமாணிக்கம்
தவராசா கலையரசன்
சித்தார்தன்
மனோகணேசன்
ராதாகிருஸ்ணன்
உள்ளிட்ட 15 பேரது கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.