முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறியியல் வேலை பகுதி பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவிற்கு அமைவாக மாணவர்களின் மேற்பார்வையோடு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொறியியலாளர் மற்றும் பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டு அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.