அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் கிளாக் கூப்பர் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார்.
நேற்றைய தினம் தனது விஜயத்தை ஆரம்பித்த கூப்பர், இந்தியா, சிறிலங்கா, மற்றும் சிங்கப்பéர் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணத்தைத் தொடருவார் என அறியமுடிகின்றது.
சிறிலங்கா விஜயத்தின் போது, எதிர்காலப் பாதுகாப்பு குறித்த சிறிலங்கா உயர்மட்ட பிரமுகர்களுடன் பேச்சு நடத்தும் அதேவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர் ஆசிய பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அறிய முடிகின்றது.