மியான்மர் குடிமக்கள் 383 பேர் அகதிகளாக மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியான்மரில் இருந்து 383 பேர் எல்லையைக் கடந்து மிசோராம் மாநிலத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இத்தகவலை மிசோராம் அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மாரில் இராணுவப் புரட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் அங்கிருந்து இந்திய எல்லையைக் கடந்து மிசோராம் மாநிலத்துக்குள் பலர் அகதிகளாக வருவது அதிகரித்து வருகிறது.