வவுனியா சிறிராமபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிய சத்தியக்கிரக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதற்கு ஆதாவாக இன்று வவுனியா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் “அரச நிர்வாகமே 55 நாட்களைக்கடக்கும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பதில் என்ன ? ” என்று பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது . இச் சுவரொட்டிகளுக்கு சிறி சனசமூக நிலையம் உரிமை கோரி பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .