மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுடைய திருவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பும் அதேநேரம் வடக்கு கிழக்கு முழுவதிலும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் இறந்த ஆயிருக்கு இறுதி மரியாதை மக்களால் செய்யப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் இன்றைய தினம் மாலை இடம்பெற இருக்கின்ற திருப்பலியின் பின்னர் மறைந்த ஆயரின் திருவுடல் புனித செபஸ்தியார் ஆலயத்தினுள் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.