அவுஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தைச் சேர்ந்த பிரியா-நடேஸ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கான தனது முயற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தடுத்துவிட்டதாக லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் செனட்டர் Kristina Keneally குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தமிழ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கு தனது சொந்த செலவில் அவர் கிறிஸ்மஸ் தீவிற்குச் சென்றுள்ளார் Kristina Keneally.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.