பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.
‘தி செரீனா’ சொகுசு விடுதியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சீன தூதர், ஆஃப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பலூசிஸ்தான் மகாணத்தின் கொயட்டா நகரத்தில் இருந்தார் எனவும், சம்பவம் நடந்த போது சீன தூதர் விடுதியில் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.