TRO நாதன் என அழைக்கப்படும் சொக்கநாதன் யோகநாதன் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.
குழந்தை மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த இவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை அம்மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் வளர்ச்சியின் மீது பெரிதும் அக்கறைக் காட்டிய யோகநாதன அவர்கள் குழந்தை மேம்பாட்டு மையத்தின் முதுக்கெலும்பாக செயல்பட்டவர் என அம்மையம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் மண் மீட்பு போரிலும் அதற்கு பின்பும் பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறுவதற்காக இவர் பெருங்பங்களிப்பை செய்திருக்கிறார்.
“தயவு செய்து மக்களின் முன்னேற்றத்திற்காக இணைந்து பணியாற்றுங்கள்,” என்பதே யோகநாதன் அவர்களின் கடைசி வார்த்தைகள் என இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ தேசியத் தலைவரால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின் பதவி விலகிய போதும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் இணைந்து இறுதி வரையில் தன் மக்களுக்காக பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.