கடந்த 11 ஆண்டு களுக்கு மேலாக அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரியுள்ளார்.
ராஜன் எனும் 48 வயதான அந்த அகதி, கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே நேரம், அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலை யிலிருந்த கண்ணா என்றழைக்கப்படும் கஜேந்திரமோகன் என்ற தமிழ் அகதி, சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.