சட்டங்களை இயற்றுபவர்கள் வீடுகளிலேயே இவ்வாறான நிலை ஏற்படின், நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று அச்சம் ஏற்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் செயற்பாட்டாளர் சுரேஸ்குமார் ருசாநந்தினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடாக மையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி, கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் எப்படி நடமாடுவது, எவ்வாறு பேசுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அச்சமாகவே உள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.