இந்தியாவிலிருந்து வரக்கூடிய பயணிகள் மீதான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியதைத் தொடர்ந்து, விமானக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஹைதராபாத்திலிருந்து வளைகுடாவுக்கு செல்ல விமானக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வளைகுடாவில் பணியாற்றி வந்த ஆயிரக் கணக்கான உடல் உழைப்புத் தொழிலாளர்கள் கொரோனா பயணத்தடை காரணமாக பயணிக்க முடியாத நிலை நீடித்து வந்தது. தற்போது பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொழிலாளர்கள் விமானக் கட்டணம் குறைவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.