சிறிலங்காவில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென, யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவி உட்பட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.